பாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.
வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு, டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விருந்தளித்தார். இதில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடியை, பூங்கொத்து கொடுத்து, அமித் ஷா வரவேற்றார். கூட்டத்தில், அகாலிதளம் தலைவர் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதன்பின்னர் கூட்டணி கட்சியினருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
Next Story