வாரணாசியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் - மாயாவதி

ரேபரேலியில் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டது போல வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் - மாயாவதி
x
ரேபரேலியில் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டது போல வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, உத்தரபிரதேச மாநிலத்தில் வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் நீக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். ரேபரேலி தொகுதியில் 1977ல் இந்திரா தோற்கடிக்கப்பட்டது போல மோடிக்கு வாரணாசியில் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் யோகிக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய படிப்பினையை தரும் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்