தினகரன் பிரசாரத்துக்கு தடை கேட்டு மனு : அதிமுக சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தினகரன் பிரசாரத்துக்கு தடை கேட்டு மனு : அதிமுக சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கல்
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது தனி நபர் விமர்சனம் செய்வதாகவும், காவிரி மேலாண்மை வாரியம், எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்து பேசுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவரும் தினகரன் மீது தேர்தல் நடத்தை விதி மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரது தேர்தல் பிரசாரத்தை தடை செய்ய  வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் மனுவில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்