எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் - மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி

நெல்லையில் மரணமடைந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.
எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் - மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி
x
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்த சில வருடங்களாக தமது குடும்பத்தினருடன் நெல்லையில் வசித்து வந்தார். இந்நிலையில் முதுமை காரணமாக அதிகாலை அவர் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்