இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது
இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி
x
அணுகுண்டு வைத்திருப்பதாக அடிக்கடி பாகிஸ்தான் பயம் காட்டுகிறது. அப்படியானால் நம்மிடம் உள்ள அணுகுண்டு  தீபாவளி அன்று வெடிக்கவா வைத்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.ராஜஸ்தான் பார்மரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பாகிஸ்தானின் அச்சுறுத்தலுக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டதாகவும், இந்தியா அந்த கொள்கையை நிறுத்திவிட்டதாகவும் கூறினார்.இன்று இந்தியா தீவிரவாதிகளை அவர்கள் இடத்திற்கே சென்று வேட்டையாடுவதாகவும், இதனால் அவர்களுக்கு இந்தியா என்றாலே   பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்