"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா? - பிரதமர் மோடி
x
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ராஜஸ்தானில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா? பணிந்து போகும் இந்தியா வேண்டுமா என கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் இந்தியா இருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு அமைதியாக இருக்கும் இந்தியா இருந்ததாகவும் மோடி கூறினார்.ஒரு பக்கம் நாட்டை பலவீனமாக்கும் காங்கிரஸ் நிற்பதாகவும் மற்றொரு புறம் நாட்டை வலிமையாக்கும் பாஜக நிற்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்