வயநாடு தொகுதியில் பிரியங்கா சுற்றுப்பயணம் - ராகுல் கூறினால் மோடியை எதிர்த்து போட்டியிட தயார்

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துடன் சந்திப்பு
வயநாடு தொகுதியில் பிரியங்கா சுற்றுப்பயணம் - ராகுல் கூறினால் மோடியை எதிர்த்து போட்டியிட தயார்
x
ராகுல்காந்தி உத்தரவிட்டால் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, அங்குள்ள மக்கம்குன்னு பகுதிக்கு சென்றார். கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் வசந்த் குமார் வீட்டுக்கு சென்ற பிரியங்கா, வசந்த் குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். 
பின்னர், வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த பிரியாங்காவிடம், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவீர்களாக என கேட்டபோது, வாரணாசி தொகுதியில் போட்டியிடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினால், மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என  பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்