ஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது. ஏற்கனவே குஜராத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ஹர்த்திக் பட்டேல் பேசிக்கொண்டு இருந்த போது தொண்டர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.
Next Story