வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை
x
கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மூன்றாவது கட்டமாக வரும் 23 ஆம் தேதி கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நாளை பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். பாஜக கூட்டணி வேட்பாளர் துஷார் வெள்ளாப்பள்ளிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சுல்தான் பெத்தேரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதனால் அந்த தொகுதியில் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்