எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டும் எப்படி "துப்பு" கிடைக்கிறது? - ப.சிதம்பரம் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே வருமான வரித் துறைக்கு 'துப்பு' கிடைக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமான வரித்துறை சோதனை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமாக வருமான வரித் துறையின் எதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே வருமான வரித் துறைக்கு 'துப்பு' கிடைக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story