காங். வேட்பாளர் மீது சிபிஐ வழக்கு உள்ளது - பியூஸ் கோயல்

வைத்திலிங்கத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாக தெரிவித்தார்.
x
புதுச்சேரியில்,மாநில பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் என். ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.மேலும், மத்திய அரசு செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாகவும், சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்க உள்ளதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.இந்த 179 கிலோமீட்டர் தூர ரயில் பாதைக்கு,மத்திய அரசு இரண்டாயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்