"பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சம் மக்கள் உள்ளனர்" - வைகோ

"காங்கிரஸ் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்"
பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சம் மக்கள் உள்ளனர் - வைகோ
x
காங்கிரஸ் ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைகோ உறுதியளித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுகவேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், பட்டாசு தொழிலை நம்பி இருந்த 8 லட்சம் தொழிலாளர்கள் தற்போது மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் வைகோ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்