"அ.தி.மு.க வெற்றியை குவிக்க முனைப்புடன் பணியாற்றுங்கள்" - அ.தி.மு.க மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற மகளிர் அணியினர் பணியாற்ற, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க வெற்றியை குவிக்க முனைப்புடன் பணியாற்றுங்கள் - அ.தி.மு.க மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகளிருக்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். மேலும், அதிமுக அரசை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, நடைபெற உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பணியாற்ற மகளிர் அணியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். வீடு வீடாக சென்று அதிமுகாவின் எதிர்கால திட்டங்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், ஒன்றரை  கோடி தொண்டர்களும் ஒவ்வொரு வாக்கை, கட்சிக்கு கொண்டு வந்து சேர்ந்தாலே மூன்று கோடி வாக்குகளுக்கும் மேல் பெற்று நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அதிமுக குவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்