நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் - 2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெற்று வருகிறது
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, விழுப்புரம், தேனி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், அரக்கோணம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 19 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்