பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்
x
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூ​றியுள்ளார். சில நிமிடங்களே ஓடும் அந்தக் காட்சிகளில் மாணவிகள் அலறித் துடிப்பது பெரும் வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சில வார இதழ்கள் வெட்டவெளிச்சமாக வெளியிட்டுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின் போராட்டங்கள் நடத்தியும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். குலை நடுங்கும் வகையில் பெண்களை சீரழிக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற அவர் யாரும் தப்பமுடியாது என்று கூறியுள்ளார். சென்னை முதல் பொள்ளாச்சி வரை பாலியல் வன்முறை நீண்டிருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வலியுறுத்தி தி.மு.க சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்