ஆளுநரிடம் திமுக புகார் - ஆர்.எஸ்.பாரதி கடிதம்

அதிமுக கட்சி பணிகளுக்காக அரசு தலைமை செயலகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரிடம் திமுக புகார் - ஆர்.எஸ்.பாரதி கடிதம்
x
* தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதத்தில் இப்புகாரை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி,  தலைமை  செயலகத்தை, அரசு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது விதிமுறை என்று அக்கடிதத்தில் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார். 

* ஆனால் நேற்று அ.தி.மு.க. கட்சி பணிகளுக்காக,  அரசு தலைமை செயலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தியதாகவும், இதற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துணை போயிருப்பதாகவும் ஆர்.எஸ். பாரதி 
குற்றம் சாட்டியுள்ளார்.  முன்னாள் எம்.பி .கே.சி.பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி , அரசின் தலைமை செயலகத்தில் நடைபெற்றதாக ஆர்.எஸ் பாரதி சுட்டிக்காட்டியுள்ளார்.

* அதிமுக தலைமை அலுவலகம் சென்னையிலேயே, அமைந்திருக்கும்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி,அரசியல் பணிகளுக்காக, அரசு தலைமை செயலகத்தை பயன்படுத்தி உள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் இப்பிரச்சினையில் தலையிட்டு, முதலமைச்சர்,  துணை முதலமைச்சர்,  அரசு  தலைமை செயலாளரிடமிருந்து  உடனடியாக விளக்கம் கேட்டு,  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அக்கடிதத்தில் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்