அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இடம் : பேச்சு நடந்து வருவதாக அமைச்சர் பியூஸ்கோயல் தகவல்

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இடம் : பேச்சு நடந்து வருவதாக அமைச்சர் பியூஸ்கோயல் தகவல்
x
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்,  மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், முரளிதரராவ் உள்ளிட்டோர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது உடல் நலம் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், விஜயகாந்த் விரைந்து உடல் நலம் பெற தாம் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்