"ஜெயலலிதா வழியில் தேர்தல் வியூகம் அமைப்போம்" - கடம்பூர் ராஜூ

ஜெயலலிதா வழியில் வியூகங்கள் அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஜெயலலிதா வழியில் தேர்தல் வியூகம் அமைப்போம் - கடம்பூர் ராஜூ
x
ஜெயலலிதா வழியில் வியூகங்கள் அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில், அமைச்சர் ஆர் .பி,உதயகுமர் தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்கள் வென்றோம்.  அதுபோல  இப்போதும் ஜெயலலிதா வழியில் வியூகம் வகுத்து, வெற்றி கூட்டணி உருவாக்கி அனைத்து இடங்களிலும் வெற்றியை பெறுவோம் என்றார். அதிமுக அரசு கடந்த 2 ஆண்டுகளில் நல்லாட்சியை அளித்து வருவதுடன், அடுத்த 100 ஆண்டுகளுக்கும் ஆட்சி செய்யும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்