"மக்களின் பிரச்சினை மோடிக்கு புரியவில்லை" - கே.எஸ்.அழகிரி
'கமலஹாசன் தி.மு.க.வை விமர்சனம் செய்தது தவறு' என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கே.எஸ்.அழகிரி தமது சொந்த ஊரான கீரப்பாளையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் பிரச்சினையை புரிந்து கொள்ளும் ஆற்றல் பிரதமர் மோடிக்கு இல்லை என்று தெரிவித்தார். கமல்ஹாசன் தம்மை ஒரு இடதுசாரியாக, காட்டி கொண்டதாலேயே அவர் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருதியதாக அவர் தெரிவித்தார்.
Next Story