நாட்டை விட தாங்கள் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது - ராகுல்காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.
நாட்டை விட தாங்கள் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது - ராகுல்காந்தி
x
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர், நாட்டில் உள்ள அமைப்புகள் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் உரியது அல்ல என்றும், அது நாட்டு மக்கள் அனைவருக்கும் உரித்தானது என தெரிவித்தார். அரசியல் சாசன அமைப்புகள் உள்ளிட்ட பொது நல அமைப்புகளை மக்களின் நலனுக்காக மீட்டெடுப்பது காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கடமை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாட்டை விட தாங்கள் மேலானவர்கள் என பா.ஜ.க.வினர் நினைத்துக் கொண்டு செயல்படுவதாக தெரிவித்த ராகுல்காந்தி, இன்னும் 3 மாதத்தில் தங்களை விட நாட்டு மக்கள் பெரியவர்கள் என்பதை புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்