முதல் கட்டத்தில் தமிழகத்தில் மக்களவை தேர்தல்? - அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம்

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை, முதலாவது கட்டத்திலேயே நடத்த வேண்டும் என அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.
முதல் கட்டத்தில் தமிழகத்தில் மக்களவை தேர்தல்? - அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம்
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை, முதலாவது கட்டத்திலேயே நடத்த வேண்டும் என அதிமுக கடிதம் கொடுத்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், தேர்தல் நடைபெறும் சமயத்தில், கோடை காலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் தேர்தலை முதலாவது கட்டத்திலேயே நடத்துமாறு அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை மற்றும் அதிமுக எம்பி வேணுகோபால் ஆகியோர் இந்த கடிதத்தை கொடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்