"கூட்டணி கதவு திறந்தே உள்ளது" - பிரதமர் மோடி

அதிமுக, திமுக, ரஜினி என யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி அமைக்க பாஜக தயாராக உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, கூட்டணி குறித்து நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, 20 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிகரமான கூட்டணியை வாஜ்பாய் அமைத்து காட்டினார் என குறிப்பிட்டார். அதனால் அவரது வழியில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதிமுக, திமுக, ரஜினி என யாருடனும் கூட்டணி அமைக்க பாஜக தயாராக உள்ளதாகவும், பழைய நண்பர்களுக்கும் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்