ராகுலின் 'கை' யை வலுப்படுத்துவோம் - ஸ்டாலின்

மத்திய பாஜக ஆட்சியை அகற்றிட நேசக் கரங்களாய் இணைந்திடுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளளார்.
ராகுலின் கை யை வலுப்படுத்துவோம் - ஸ்டாலின்
x
* தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தி, ராகுல்,காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

* அந்த கூட்டத்தில் பேசும் போது, மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்திட ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

* 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைய  காரணமாக இருந்த  ராகுல்காந்தியை முன்னிறுத்துவது தான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையிலே அவ்வாறு கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

* தற்போதைய சூழலில் இது குறித்து தோழமைக் கட்சிகளுக்குள் விவாதங்கள் ஏற்படலாம் எனவும், எனினும் தோழமை சக்திகள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

* எனவே மதவெறியின் பிடியில் இருந்து நாட்டை காத்திட ராகுல்காந்தியின் கரத்தை  வலுப்படுத்துவோம் என  ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்