தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்கள், காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - குமாரசாமி

காவிரி பிரச்சினையில், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முன்வருமாறு, தமிழக அரசுக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
x
காவிரி பிரச்சினையில், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முன்வருமாறு, தமிழக அரசுக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கு இடையே, 125 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை நீடித்து வருகிறது என்றார். தமிழகத்தில் 50 சதவீத தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை சுட்டிக்காட்டிய குமாரசாமி, இதனை சேமித்து பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு,. யோசனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்