"கருணாநிதியைப் போன்றே நானும் செய்கிறேன்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தற்போதைய அரசியல் சூழலில், கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதையே தானும் செய்து வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியைப் போன்றே நானும் செய்கிறேன் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
x
* திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் ஒற்றுமையையும் சிதைக்கும் வகையில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் 

* காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியின் அடிப்படை நோக்கத்தை பறைசாற்றும் வகையில்  5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* மதவெறி, மாநில உரிமை பறிப்பு, பன்முகத்தன்மை சிதைப்பு உள்ளிட்ட பல செயல்களில் பாஜக அரசு,  ஈடுபடும் வேளையில், கருணாநிதி இருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதே போன்று தானும் பல கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* சோனியா காந்தி, சரத் பவார் போன்ற தலைவர்கள் பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்