"இந்த ஆட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இருக்காது" - தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே அமைதிப் பேரணி நடைபெற்றது.
x
வாலாஜாசாலை, சேப்பாக்கம் வழியாக வந்த பேரணி ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு மலர் வளையம் வைத்து தினகரன் அஞ்சலி செலுத்தினார். அவரது ஆதரவாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இந்த ஆட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இருக்காது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்