கஜா புயல் : இழப்பு தெரியாமல் டெல்லி சென்று என்ன பயன் - தினகரன்

கஜா புயல் : இழப்பு தெரியாமல் டெல்லி சென்று என்ன பயன் - தினகரன்
x
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் கஜா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளை அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகப் பெரிய பாதிப்பை, முன் எப்போதும் சந்தித்திராத ஒரு பேரிழப்பை டெல்டா மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்ட மக்கள் சந்தித்துள்ளதாக தெரிவித்தார். பல தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து கூட பார்க்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாகவும் தினகரன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்