புதுக்கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதித்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார் மூலம் மாப்பிள்ளையார்குளத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். புயல் பாதிப்பில் இறந்த 9 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர், தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர்களிடம் கொடுத்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், கேரள மாநிலத்தை போல், தமிழக எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். நிவாரண உதவி வழங்க வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
Next Story