மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளது - ஸ்டாலின்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை கண்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளது - ஸ்டாலின்
x
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கஜா புயல் தொடர்பாக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வெளிப்படையாகப் பாராட்டி  இருந்ததாகவும் ஆக்கப்பூர்வ முயற்சியை  அரசியலுக்கு அப்பாற்பட்டே பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக இருப்பதை நேரில் பார்த்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நேரில் பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்களின் அபயக் குரலும் அவர்கள் வெளிப்படுத்திய அவநம்பிக்கையும் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பரிதவிக்கும் மக்களை நேரில் சென்று பார்க்க முதலமைச்சருக்கு நேரமும் மனமும் இல்லை எனவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்