"குடிநீர், பால் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது" - தமிழிசை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"புயல் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்" - திருநாவுக்கரசர்
கஜா புயல் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் உடனடியாக செல்ல வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டார்.
கஜா புயல் : அரசு உடனடி நடவடிக்கை தேவை - ராமதாஸ்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் உள்ள குறைகளை அரசு களைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், புயல் பாதிப்பு பகுதிகளுக்கு கூடுதலாக பணியாளர்கள் மற்றும் தளவாடங்களை அனுப்பி மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story