கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.
கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு
x
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார்  துறைமுகம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் அறிவுறுத்தலின்படி முன்னெச்சரிகை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறினார். புயலால் சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதுநகர் துறைமுகத்தை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள் துறைமுகம் சீரமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்