குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை சந்தேகம் அளிக்கிறது - ஸ்டாலின்
குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது சந்தேகம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், அதிவேகமாக முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அரசியல் அழுத்தமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது சந்தேகம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குட்கா வழக்கிலிருந்து உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விடுவிக்கவே இந்த அவசர நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுகிறது எனவும் அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Next Story