"எடப்பாடி ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள்" - ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள் - ஸ்டாலின்
x
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை மத்திய அரசு காப்பாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். நீட் பிரச்சினை, இந்தி திணிப்பு என எந்தப் பிரச்சினைக்கும் எதிர்ப்பைக் காட்டாத தமிழக அரசு, எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக தெரிவித்த ஸ்டாலின், பிரதமர் மோடியை, வெளிநாட்டு வாழ் பிரதமர் எனவும் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்