தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி முதல் வாரம் கூடுகிறது...

தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி முதல் வாரம் கூடுகிறது...
x
தமிழக சட்டபேரவை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை  ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் அடுத்த பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. இதனால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்