2, 3 ஆண்டுகளில் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சி அடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் உலகவங்கி சுகாதார திட்ட பணிகளுக்காக உலக வங்கி 2 ஆயிரத்து 658 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கிய கருத்தரங்கில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கருத்தரங்கில் இறுதி செய்யப்படும் அறிக்கை, மத்திய அரசு மற்றும் உலக வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
Next Story