ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்
x
கோயில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, பாசுரங்கள் பாடியபடி கோயில் அர்ச்சகர்கள் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர், பிரகாரத்திற்குள் சென்ற முதலமைச்சர் அங்கிருந்த கோயின் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கினார். அமைச்சர்கள் வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்பிக்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்