"பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேரும் மனநிலையில் உள்ளது" - தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேரும் மனநிலையில் உள்ளது - தினகரன்
x
சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதை கண்டித்து வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கூறினார். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்றும், பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேரும் மனநிலையில் உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்