"அரசு பன்றிக் காய்ச்சலை தடுக்கவில்லை" - தமிழக அரசு மீது துரைமுருகன் விமர்சனம்
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அமைச்சர்களும் வழக்கு காய்ச்சலில் இருப்பதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அமைச்சர்களும் வழக்கு காய்ச்சலில் இருப்பதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம், அனைக்கட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினமும் கொலை கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவிட்டதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாடே இப்போது சிறைசாலை போல் இருப்பதாக துரைமுருகன் விமர்சித்தார்.
Next Story