முதலமைச்சர் மீதான விசாரணையை எதிர்த்து ஊழல் தடுப்புத் துறை மேல்முறையீடு செய்யும் என்று அதிமுக சொல்வதா? - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மேல்முறையீடு செய்யும் என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் எப்படி முடிவு செய்ய முடியும்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலமைச்சர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மேல்முறையீடு செய்யும் என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் எப்படி முடிவு செய்ய முடியும்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் நேர்மைத்தன்மை, சுதந்திரம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் உயர்நீதி மன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது துறையிலேயே ஊழல் குற்றத்திற்கு உள்ளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story