வெளிமாநிலத்தவர் வெளியேறும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? - ராகுல்காந்தி

குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
வெளிமாநிலத்தவர் வெளியேறும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? - ராகுல்காந்தி
x
குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம்
பிகானேர் என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், குஜராத்தில் வெளி மாநில இளைஞர்கள், குறி வைத்து தாக்கப்படுவதாக கூறினார். ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பீஹார் என இந்தி மொழி பேசும் இளைஞர்கள், தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து, பிரதமர் மோடி, மவுனம் காப்பது ஏன்? என்றும் ராகுல்காந்தி வினா எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்