கால்வாய்களின் உள்வாங்கும் திறனைவிட அதிக நீர் வந்தது - அமைச்சர் உதயகுமார்
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், கனமழை காரணமாக மதுரையில் உள்ள கால்வாய்களில் உள்வாங்கும் திறனைக் காட்டிலும் அதிகளவிலான நீர் வரத்து இருந்ததால் அவற்றில் உடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். கால்வாய்கள் அனைத்தையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
Next Story