அரசியல் சட்டப்பிரிவு 124 என்றால் என்ன...?
நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்ட இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 என்பது அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்களின் பணிகளை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும்.
குடியரசு தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் சட்டப்படியான பணிகளை தவறாக சித்தரித்தல் அல்லது ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்திகளை பிரசுரித்து வெளியிடுவதன் மூலமாக, அவர்களின் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது அல்லது இடையூறு செய்வது ஆகியவை குற்றமாகும். இந்த குற்றத்திற்காக அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகவும் இந்த சட்ட விதி அனுமதி அளிக்கிறது.
Next Story