துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டதை நம்ப முடியவில்லை - பன்வரிலால் புரோஹித்
துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது கண்டு வருத்தம் அடைந்ததாக தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
கல்வியை சமுதாய பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது தொடர்பான உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது கண்டு வருத்தம் அடைந்ததாக தெரிவித்தார். துணை வேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையில் தான் நடைபெற வேண்டும் என்பதால், 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமித்ததாகவும் அவர் கூறினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று இருந்தனர்.
Next Story