தீவிர கனமழை பெய்யும் என்பதால் தயார் நிலையில் 6,812 தங்கும் முகாம்கள் - ஆர்.பி. உதயகுமார்

வரும் 7 ம் தேதி அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அவசர தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
தீவிர கனமழை பெய்யும் என்பதால் தயார் நிலையில் 6,812 தங்கும் முகாம்கள் - ஆர்.பி. உதயகுமார்
x
வரும் 7 ம் தேதி அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அவசர தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்று கூறிய ஆர்.பி. உதயகுமார், பொதுமக்கள் 1077 என்ற எண்ணை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். தமிழக அரசு தூங்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளித்தார். தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 812 தங்கும் முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்