எம்எல்ஏ கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம்

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரத்தில் திடீரென கருணாஸ் பாதுகாப்பு கருதி வேலூர் சிறைக்கும், செல்வநாயகம் கடலூர் சிறைக்கும் மாற்றப்பட்டனர்.
எம்எல்ஏ கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம்
x
முதலமைச்சர் மற்றும் காவல்துறையினர் பற்றி கருணாஸ் பேசியது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு 2 உதவி ஆணையர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சென்று கருணாசை கைது செய்தனர். பின்னர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்த போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. 

அதன்பிறகு, கருணாஸ் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய நால்வரும் எழும்பூர் குற்றவியல் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கருணாஸ் மற்றும் செல்வ விநாயகத்தை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரத்தில் திடீரென கருணாஸ் வேலூர் சிறைக்கும் செல்வநாயகம் கடலூர் சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்