புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் காப்பீடு ஆவணங்களை பயனாளிகளுக்கு சற்று முன் பிரதமர் மோடி வழங்கினார். இந்த மருத்துவ திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்தினரின் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். பிரதமர் மோடியின் கனவு திட்டமான அந்த திட்டத்துக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த திட்டத்தின் மூலம் 2 கோடியே 85 லட்சம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்