தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் - திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் - திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை
x
பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விண்வெளி துறையில் முன்னேறி இருக்கும் பல நாடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுதளங்களை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.நம் நாட்டிற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே ஏவுதளம் இருக்கும் நிலையில், இன்னொன்று கூடுதலாக அமைத்தால்  அத்துறைக்கு இன்னும் பலம் சேர்க்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மங்கள்யானை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவியதற்கு பதிலாக குலசேகரன் பட்டினத்தில் இருந்து ஏவியிருந்தால் 1350 கிலோ எடையை அது சுமந்து சென்றதற்கு பதிலாக 1800 கிலோ எடை வரை சுமந்து சென்றிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதையும் கனிமொழி தமது சுட்டிக்காட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்