ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரி முறையீடு - சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரி முறையீடு - சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது
x
நீதி மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் சூர்ய பிரகாசம், ஹெச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என முறையிட்டார். இந்த முறையீட்டை நிராகரித்த நீதிபதி செல்வம், ஹெச்.ராஜா மீது அவதூறு வழக்கு தான் எடுக்க முடியும் என கருத்து கூறினார். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும் வழக்கறிஞர் சூர்ய பிரகாசத்துக்கு நீதிபதி அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்