தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை மூடக்கூடாது - ஜி.கே.வாசன்
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கும் நிதியுதவியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என்ற காரணத்தை கூறி 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக வெளிவரும் செய்திகள் வேதனைக்குரியதாகும் என கூறியுள்ளார். தமிழக அரசு மாநிலம் முழுவதும் இருக்கின்ற எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடவோ, மாணவர்கள் சிரமத்திற்கு உட்படும் வகையில் இணைக்கவோ முன்வரக் கூடாது எனவும் ஜி.கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.
Next Story