கருணாநிதி பெயரில் விரைவில் புதிய அமைப்பு துவக்கிறார் மு.க. அழகிரி - ஆதரவாளர் தகவல்

கருணாநிதி பெயரில் விரைவில் புதிய அமைப்பை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி துவக்க முடிவு செய்துள்ளார்.
கருணாநிதி பெயரில் விரைவில் புதிய அமைப்பு துவக்கிறார் மு.க. அழகிரி - ஆதரவாளர் தகவல்
x
மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். " கலைஞர் எழுச்சி பாசறை" அல்லது " கலைஞர் எழுச்சி பேரவை " என்ற பெயரில் மு.க. அழகிரி புதிய அமைப்பை துவக்க முடிவு செய்துள்ளதாகஅவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்தார். கருப்பு - சிவப்பு வேட்டியை மாற்றி கட்ட முடியாது என கூறிய இசக்கி முத்து இது தேர்தலுக்கான அமைப்பாக இருக்காது என்று விளக்கம் அளித்தார். இதனிடையே, மு.க. அழகிரி, புதிய அமைப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்